செங்கம் - Chengam

செய்யாறு: லாரியில் இருந்த கற்கள் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி

செய்யாறு: லாரியில் இருந்த கற்கள் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் பழனி(48). இவர், நேற்று முன்தினம் இரவு ஆந்திரத்தில் இருந்து கடப்பா கற்களை லாரியில் ஏற்றிக்கொண்டு திண்டிவனம் வந்து கொண்டிருந்தார்.  கடப்பா கற்களை இறக்குவதற்காக சித்தூர் மாவட்டம், வசந்தபுரத்தைச் சேர்ந்த தினகரன்(38) உள்ளிட்ட 4 பேர் லாரியில் உடன் வந்தனர். செய்யாறு - ஆற்காடு சாலையில் உள்ள சிறுங்கட்டூர் கிராமம் அருகே உள்ள வேகத்தடையில் லாரி ஏறி இறங்கியதாகத் தெரிகிறது.  அப்போது, லாரியின் மீது கற்களுக்கு இடையே படுத்திருந்த தினகரன் மீது கற்கள் சரிந்து விழுந்தன. இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த மோரணம் போலீசார் சென்று தினகரனின் உடலை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


திருவண்ணாமலை