பிரதமர் மோடி இன்று (ஏப். 06) தமிழகத்திற்கு வருகிறார். ராம நவமி நாளான இன்று, நண்பகல் 12 மணியளவில், இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்து, சாலை பாலத்திலிருந்து ஒரு ரயிலையும், கப்பலையும் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மோடியின் ராமேஸ்வரம் வருகையையொட்டி மோப்ப நாய் உதவியுடன் பாலத்தில் நிபுணர்கள் தீவிர சோதனை நடத்துகின்றனர்.