திருவைகுண்டம் - Srivaikuntam

பொதுமக்களுக்கு இடையூறு: தந்தை மகன் கைது!

பொதுமக்களுக்கு இடையூறு: தந்தை மகன் கைது!

தச்சன்விளையில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்ததாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் காவல் உதவி ஆய்வாளர் பொன்னு முனியசாமி தலைமையில் போலீசார் முத்துராமன், கண்ணன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். தச்சன்விளை பேருந்து நிறுத்தம் அருகில் வரும்போது தச்சன்விளை அண்ணா நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (41), அவரது மகன் சந்தோஷ்குமார் (19) ஆகியோர் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக ஆபாச வார்த்தைகளால் பேசி நின்றுள்ளனர். இவர்களை போலீசார் கண்டித்து அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால் அதனை அவர்கள் பொருப்படுத்தாமல் தொடர்ந்து இடையூறாக நின்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பொதுமக்களுக்கு இடையூறாக இருந்ததாக கூறி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.