கும்பகோணம் - Kumbakonam

காவல் நிலையத்தில் கடிச்சம் பாடி ஊராட்சி தலைவர் புகார்.

சுவாமிமலை அருகே உள்ள கடிச்சம்பாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் பெயரை அழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிச்சம்பாடி பெண் ஊராட்சி மன்றத் தலைவர், சுவாமிமலை காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். அதிமுகவைச் சேர்ந்த மலர்கொடி சீனிவாசன் வயது49, இவர் கடிச்சம்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியில் உள்ளார். புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி, கடந்த 2023-ம் ஆண்டு ஆக. 10-ம் தேதி திறந்து வைத்தார். அதன் பிறகு, அந்த அலுவலகத்தின் முகப்பில் தலைவரான அவரது பெயர் பெயிண்டால் எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில், மக்களவைத் தேர்தல் கட்டுப்பாடுகள் விதிமுறைக்கு வந்ததால், தலைவரான அவரது பெயர் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக, பிளக்ஸ் வைத்து மறைக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் வாக்குப் பதிவு முடிந்ததால், ஊராட்சி மன்றத் தலைவர் மலர்கொடி சீனிவாசன், அவரது பெயரை மறைத்துள்ள பிளக்ஸை அகற்றிய போது, அவரது பெயர் அழிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా