
தென்காசி: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (31.01.2025) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் பெற்றுக்கொண்டார். மேலும் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.