10ம் வகுப்பு தேர்வில் 2ம் இடம்-திமுக நிர்வாகி பாராட்டு
தென்காசி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவி எபநேசரை பாராட்டி சான்றிதழும் ஊக்கத்தொகையும் முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார். மாணவிஎபநேசர் பாவூர்சத்திரம் புனித அ சிசி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய தாய் தந்தையர் ஏழை தொழிலாளிகளான அவருடைய ஆசிர்ஜெயக்குமார்-ஜான்சிராணி ஆவர். பத்தாம் வகுப்பில் 496 மதிப்பெண்கள் பெற்று தென்காசி மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளதை தொடர்ந்து திமுக முன்னாள் தென்காசி மாவட்ட கழகச் செயலாளர் சிவபத்மநாதன் பாராட்டி சான்றிதழும் ஊக்கத் தொகையும் வழங்கினார்கள் நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர் சீனித்துரை மாவட்ட மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர் சாலிமேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்