தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பகுதிகளில் மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம்போல் மழைநீர் ஓடியது. இதனால் குளங்களுக்கு நீர் வரத்து தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த 2 நாள்களாக சங்கரன்கோவில் பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜனவரி 19) காலை முதல் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.