சங்கரன்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை

79பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பகுதிகளில் மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம்போல் மழைநீர் ஓடியது. இதனால் குளங்களுக்கு நீர் வரத்து தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த 2 நாள்களாக சங்கரன்கோவில் பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜனவரி 19) காலை முதல் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி