சங்கரன்கோவில் - Sankarankovil

கோயில் பாதுகாப்பு பணி நியமன ஆணை வழங்கிய தென்காசி எஸ்பி

கோயில் பாதுகாப்பு பணி நியமன ஆணை வழங்கிய தென்காசி எஸ்பி

தென்காசி மாவட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள கோயில் பாதுகாப்பு படை ஆளினர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் காலியாக உள்ள கோவில் பாதுகாப்பு பணிக்கு முதற்கட்டமாக 11 முன்னாள் ராணுவப்படை வீரர்கள்/ ஓய்வு பெற்ற காவல்துறை ஆளினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். அவர்களுக்கான பணி நியமன ஆணையை இன்று (செப்.,19) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி ஆர் சீனிவாசன் வழங்கினார். தென்காசி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள கோயில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் பாதுகாப்பு படை வீரர்கள், ஓய்வு பெற்ற காவல் ஆளினர்கள் விண்ணப்பிக்கலாம்.

வீடியோஸ்


தென்காசி