திருவடனை - Tiruvadanai

ராமநாதபுரம்: மூதாட்டியை தாக்கி நகைகளை பறித்த வடமாநில தொழிலாளர் கைது

ராமநாதபுரம்: மூதாட்டியை தாக்கி நகைகளை பறித்த வடமாநில தொழிலாளர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே தேர்போகி கிராமத்தை சேர்ந்தவர் மூதாட்டி இருளாயி 80. இவர் பால் வியாபாரம் செய்கிறார். வழக்கம் போல் விற்பனை செய்ய அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு இருளாயி சென்றார். அப்போது சீமைக்கருவேலம் காட்டுப் பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் மூதாட்டியை தாக்கி தள்ளிவிட்டு தங்கச் ஜெயின், மூக்குத்தி, தண்டட்டி ஆகியவற்றை பறித்தனர். தண்டட்டியை பறித்த போது மூதாட்டியின் காது அருந்தது. மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த கிராமத்தினர் தப்பி ஓடியவர்களை தேடினர். லட்சுமிபூர் பகுதியைச் சேர்ந்த சம்புரான் 38, பீகார் மாநிலம் சிப்போல் பகுதியைச் சேர்ந்த வீபின் குமார் 20, ஆகிய இருவரும் மூதாட்டியின் அன்றாட நிகழ்வுகளை கண்காணித்து நேற்று அதிகாலை மூதாட்டியை தாக்கி நகைகளை பறித்துச் சென்றது தெரிய வந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர். காது அறுந்து காயமடைந்த மூதாட்டி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வீடியோஸ்


இராமநாதபுரம்