நெல் விதைப்பை தொடங்கிய விவசாயிகள்..!

63பார்த்தது
திருவாடானை, ஆா். எஸ். மங்கலம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டிவதைத்து வந்தது. திருவாடானை, சி. கே. மங்கலம், மங்கலக்குடி, வெள்ளையபுரம், தொண்டி, நம்புதாளை, கீழ்க்குடி, திணையத்தூா், பாண்டுகுடி, அஞ்சுக்கோட்டை, கல்லூா், கடம்பாகுடி, திருவெற்றியூா், ஆா். எஸ். மங்கலம், சனவேலி, மேல்பனையூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.

இதனிடையே, நடப்பு சம்பா பருவத்துக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் வயல்களில் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டனா். விதைத்த நாள் முதல் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் நெல் விதைகளின் முளைப்புத் திறன் குறைந்து காணப்பட்டது. தற்போது விவசாயிகள் நெல் விதைப்பு பணியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி