நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு உற்சாக வரவேற்பு.!

53பார்த்தது
ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்தர் வேணி கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி மாநில நல்லாசிரியர் விருது பெற்றதையொட்டி அவருக்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு, ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து நடத்திய பாராட்டு விழா வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சோமசுந்தரம் வரவேற்று பேசினார். முன்னதாக நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு சால்வை அணிவித்தும் சந்தன மாலை அணிவித்தும் ஆராத்தி எடுத்தும் பள்ளி மாணவர்கள் சிலம்பாட்டம் ஆடி வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து
பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்தர் வேணி நல்லாசிரியர் விருது பெற்றதையொட்டி மாணவ, மாணவியருக்கு இனிப்பு மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி ஏற்புரையாற்றினார். விழா ஏற்பாடுகளை பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் நாராயணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி