மயிலாடு துறை - Mayiladuthurai

மயிலாடுதுறை: மிதிவண்டி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆறுபாதி ஊராட்சியில் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மிதிவண்டி போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.  மேலும் இந்த நிகழ்வில் செவ்வாய் கோவில் ஒன்றிய தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் அன்பழகன், அப்துல் மாலிக் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் வழங்கி பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்