ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கான டோக்கன் வழங்கும் பணிகள் தற்போது தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது.
வரும் ஒன்பதாம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் பொங்கல் பரிசு டோக்கன்கள் வீடு வீடாக ரேஷன் கடை ஊழியர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டோக்கன்களில் பரிசு தொகுப்பை பெறும் நாள் நேரம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன.