திருமங்கலம் - Thirumangalam

திருமங்கலம்: கேரளா வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திருமங்கலம்: கேரளா வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திருமங்கலத்தில் கேரளா வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாத்தங்குடியை சேர்ந்த பால்பாண்டி (30) என்பவர் கோவையில் கட்டிட தொழிலாளியாக பணி புரிந்து வருகிறார். இவரது நண்பர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த குமார். விநாயகர் சதுர்த்தியையொட்டி தனது நண்பர் குமாரையும் அழைத்து கொண்டு பால்பாண்டி சாத்தங்குடிக்கு வந்து சித்தப்பா குருசாமியின் ரேடியோ செட் கடையின் மாடியில் தங்கியுள்ளனர். விநாயகர் சதுர்த்தி முடிந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம்(செப்.8) காலை பால்பாண்டி ரேடியோ செட் ஊழியர் ஒருவரிடம் மாடியில் நண்பர் குமார் தூங்கி கொண்டுள்ளார். நான் கோவைக்கு கிளம்புகிறேன். கீழே இறங்கி வந்தவுடன் பணம் கொடுத்து அனுப்பி விடுங்கள் என கூறி பணத்தினை கொடுத்து விட்டு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் குமார் கீழே இறங்கி வராததால் ஊழியர்கள் மாடியில் சென்று பார்த்தபோது குமார் தூக்கிட்டு இறந்தது தெரியவந்தது. இந்த தகவலறிந்து வந்த திருமங்கலம் தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்குப்பதிந்து குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా