திருமங்கலம் - Thirumangalam

முதல் கணவர் மருந்து குடித்து தற்கொலை!

முதல் கணவர் மருந்து குடித்து தற்கொலை!

மதுரை கோசாகுளம் பல்லவி நகர் 5வது தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் தினேஷ்குமார் (வயது 31). இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. வீட்டின் செலவுக்கு ஒழுங்காக பணம் கொடுக்கவில்லை. இதனால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து டைவர்ஸ் செய்த மனைவிக்கு திருமண ஏற்பாடு செய்தது தெரிய வந்தது. இதனால் மணமடைந்து புலம்பி கொண்டிருந்த முதல் கணவர் தினேஷ் குமார் கால் வலிக்கு தடவும் மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார். இது குறித்து அவருடைய அம்மா மகேஸ்வரி கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷ் குமார் சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా