திருமங்கலம் - Thirumangalam

திருமங்கலம்: பூச்சி மருந்து சாப்பிட்டு பெண் தற்கொலை

திருமங்கலம்: பூச்சி மருந்து சாப்பிட்டு பெண் தற்கொலை

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகேயுள்ள குராயூர் கிராமத்தை சேர்ந்த ஜெயக்கொடி மனைவி வேடச்சி(50) என்பவர் விவசாயி. இவர்களுக்கு போதிய வருவாய் இல்லை. இந்நிலையில் வேடச்சிக்கு வயிற்றுவலி ஏற்பட்டு தொடர்ந்து உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்தவர் நேற்று முன்தினம் (அக். , 6) இரவு வயலுக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் இவரை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా