தாலூகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

52பார்த்தது
தாலூகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலூகா அலுவலகத்தை நேற்று பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சின்னஉலகாணியைச் சேர்ந்த பால்பாண்டி (40) என்பவர் ரியல் எஸ்டேட் 'தொழிலில் முதலீடு செய்தால் இருமடங்கு லாபம் தருவதாக கூறி உறவினர்கள், தெரிந்தவர்களிடம் ரூ. பல கோடி முதலீடு பெற்று அதில் வந்த லாபத்தினை தொடக்க காலத்தில் நல்ல முறையில் பிரித்து கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் காசோலை வழங்கி மோசடி செய்தார். இந்நிலையில் ஓராண்டுக்கு முன்பு ராணுவ வீரர் தர்மலிங்கம் என்பவர் மீது வேன் ஏற்றி கொலை செய்துவிட்டு அதனை விபத்து என்று நாடகமாடிய வழக்கில் கைதாகி தற்போது சிறையில் உள்ளார்.

இந்நிலையில் நேற்று மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்த பிறகு கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி