பள்ளியில் மாணவர்கள் நடத்திய பார்லிமென்ட்

68பார்த்தது
பள்ளியில் மாணவர்கள் நடத்திய பார்லிமென்ட்

திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் எப். எம். மெட்ரிக் பள்ளியில் தலைமைப் பண்புகளை வளர்க்கும் உத்திகளை கற்றுத் தரும் முயற்சியாக மாணவர்களே பள்ளியை நிர்வகிக்கும் வகையில் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

முதல் முயற்சியாக மாணவர் பார்லிமென்ட் தொடங்கப்பட்டது முன்னாள் அதிமுக அமைச்சர், திருமங்கலம் எம்எல்ஏ ஆர். பி. உதயகுமார் தலைமை வகித்தார் மாணவர் ஜனாதிபதி கமலேஷ் ராஜா உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மாணவர் சபாநாயகராக ஹிரிகரன் துணை ஜனாதிபதியாக சூரிய பிரேம், பிரதமராக சுகாசினி உள்ளிட்ட அமைச்சரவையினர் பதவியேற்றனர்.

தாளாளர் நாராயண ராஜா பொருளாளர் அழகர்சாமி செயற்குழு உறுப்பினர் விஷ்ணு சுந்தர் மகேஷ் முதல்வர் பெட்சி மோனிகா ஆசிரியர்கள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி