கால்வாயில் டூவீலருடன் விழுந்தவர் பலி.

59பார்த்தது
கால்வாயில் டூவீலருடன் விழுந்தவர் பலி.
மதுரை அருகே கால்வாயில் டூவீலருடன் பாய்ந்து விழுந்த வாலிபர் பலியானார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நேதாஜி தெருவை சேர்ந்த பொன்னையா மகன் அருண் பாண்டியன் (24) என்பவர் ஈரோடு பெருந்துறையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவர் உறவினர் வீட்டு திருமணத்திற்காக மதுரை வந்திருந்தார். இந்நிலையில் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால் அவர் தந்தை அருண்பாண்டியன் தன் மகனை தேடியபோது அவரது மகன் விளாச்சேரி கண்மாய்க்கு செல்லும் கால்வாய் தண்ணீருக்குள் இருசக்கர வாகனத்தில் விழுந்து இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி