4 கிலோ கஞ்சா கடத்திய இரு பெண்கள் உள்பட மூவர் கைது.

80பார்த்தது
4 கிலோ கஞ்சா கடத்திய இரு பெண்கள் உள்பட மூவர் கைது.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சாவை கடத்திய இரு பெண்கள் உள்பட மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மையிட்டான்பட்டி முனியாண்டி கோயில் அருகே கள்ளிக்குடி உதவி காவல் ஆய்வாளர் முத்துராஜா தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த நான்கு பேரை போலீசார் நிறுத்தி விசாரித்தனர்.
அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தை போலீசார்
சோதனையிட்ட போது அதில் நான்கு கிலோ கஞ்சாவை பொட்டலங்களாக மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது.

இதுதொடர்பாக மைட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக்ராஜா, கனி மொழி, பிரியா ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், வாகன சோதனையின் போது தப்பி ஓடிய உதயகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி