திருமங்கலம் - Thirumangalam

சாலை விபத்தில் கணவர் கண் முன்னே மனைவி பலி

சாலை விபத்தில் கணவர் கண் முன்னே மனைவி பலி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதியதில் செவிலியர் பலியானார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நடந்த சாலை விபத்தில் விருதுநகர் மாவட்டம் கொத்தனேரியை சேர்ந்த சதீஷ்குமார் 38. தனியார் பேருந்து நடத்துனராக உள்ளார். இவரது மனைவி ராஜேஸ்வரி (30) என்பவர் செவிலியராக பணியாற்றினார். இவர்கள் நேற்று (செப் 15) மதுரையில் உள்ள உறவினர் இல்ல விசேஷத்திற்காக சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இவர்கள் அரசபட்டி பிரிவு அருகே வந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பின்னால் அமர்ந்திருந்த ராஜேஸ்வரி துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் காயமடைந்த சதீஷ்குமார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை திருமங்கலம் போலீசார் தேடி வருகின்றனர்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా