சாலை விபத்தில் தந்தை, மகள் பலி.

66பார்த்தது
சாலை விபத்தில் தந்தை, மகள் பலி.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நேற்று நடந்த சாலை விபத்தில் தந்தை, மகள் என இருவர் பலியானார்கள்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மம்சாபுரம் ராஜிவ்காந்தி நகரை சேர்ந்த துளசிநாதன், (33) என்பவர் மொபைல் போன் கோபுர பராமரிப்பு பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி, மகள் சஷ்டிகா, 6, மற்றும் 4 வயதில் மகன் உள்ளார்.

நேற்று காலை, ஒரே இருசக்கர வாகனத்தில் குடும்பத்துடன் மதுரை - சமயநல்லுார் நான்கு வழிச்சாலை திருமங்கலம் புறவழிச் சாலையில் சென்றபோது, சில பொருட்களை வாங்குவதற்காக துளசிநாதன், சஷ்டிகா இருவரும் இறங்கி கொண்டனர்.

அதன் பின் இருசக்கர வாகனத்தில் மகனுடன் விஜயலட்சுமியும் அவர்களின் புதிய வீட்டிற்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில் சர்வீஸ் சாலையில் தந்தை, மகள் நடந்து சென்றபோது, சென்னை ஐ. டி, நிறுவன ஊழியர் நாகர்கோவில் எத்தின் ஜோசப், (30) என்பவர் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து நான்கு வழிச்சாலையில் இருந்து தடம் மாறி சர்வீஸ் சாலையில் சென்ற தந்தை மகள் மீது மோதியதில், சஷ்டிகா சம்பவ இடத்திலேயே பலியானார்.

பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட துளசி நாதன் நேற்று மாலை மருத்துவமனையில் உயிரிழந்தார். திருமங்கலம் போலீசார் எத்தின் ஜோசப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி