சூளகிரி அருகே ரேஷன் அரிசி கடத்திய இரண்டு பேர்
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் ராஜசேகரன் தலைமையில் போலீசார் சூளகிரி அருகே அஞ்சலம் சந்திப்பில் வாகனத் சேதனையில் நேற்று (செப்-18) ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாகச் வந்த சரக்கு வாகனத்தைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகள் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து, வாகன டிவைர் தரணி (20) வாகன உரிமையாளா் முருகன் (39) ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில் இருவரும் முகலூா், உலகம், உள்ளிட்ட பல பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வந்து சூளகிரியில் உள்ள உணவகங்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதை அடுத்து சரக்கு வாகனத்துடன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த போலீசார் டிரைவைர் முருகன், தரணி ஆகியோரைக் கைது செய்தனா்.