
போச்சம்பள்ளி, பண்ணந்துர், மத்தூர் பகுதிகளில் மின் நிறுத்தம்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி. பண்ணந்தூர் மற்றும் மத்தூர் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் 07.01.2025 மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்படி மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளான போச்சம்பள்ளி, பாரூர், அரசம்பட்டி, புலியூர், பண்ணந்தூர், மத்தூர், மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் எம். இந்திரா தெரிவித்தார்.