பர்கூர் - Bargur

கல்லூரிபஸ் சாலையில் சென்ற டூவீலர் மீது மோதிய சிசிடிவி காட்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் குட்டப்பநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் இவர் தர்மபுரி கூட்டுறவு வங்கியின் வட்டார மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சந்தான பாண்டியன் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை சந்தான பாண்டியன் தனது தாயார் பூங்கொடியுடன் தபால் மேடு பகுதியில் உள்ள சகோதரி வீட்டு நிகழ்ச்சிக்கு டூவீலரில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். தாயும் மகனும் இருசக்கர வாகனத்தில் குட்டப்ப நாயக்கனூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது பையனூர் என்ற இடத்தில் அதி வேகமாக வந்த PSV இன்ஜினியரிங் கல்லூரி பேருந்து இவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதை அடுத்து அங்கிருந்தவர்கள் பேருந்தை துரத்தி பிடிக்க முயற்சி செய்தும் பேருந்து நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. பேருந்து மோதியதில் டூவீலரில் சென்ற பூங்கொடி இடுப்பு எலும்பு உடைந்து படுகாயம் அடைந்தார். அதே போல் இவரது மகன் சந்தான பாண்டியனுக்கும் கை கால் முகம் என பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது