
அரசம்பட்டியில் அரசு பள்ளியில் ஆண்டு விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்வி அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் சபிக்ஜான் முன்னிலையில் வைத்தார். தலைமை ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து எட்டு குழந்தைகள் புதிதாக பள்ளியில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பெற்றோர்கள், கிராமமக்கள் கலந்து கொண்டனர்.