கரூர் - Karur

பெரியார் உணர்வாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி
கரூர் |

பெரியார் உணர்வாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி

பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கம் சார்பாக இன்று கரூர் லைட் ஹவுஸ் கார்னர் தந்தை பெரியார் சிலை முன்பாக 2009 ஆம் ஆண்டு இலங்கை முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சாமானிய மக்கள் நலக் கட்சி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன் மாவட்ட செயலாளர் சண்முகம் தமிழ் ஆர்வலர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், திராவிட கழக பொதுக்குழு உறுப்பினர் அன்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் நகர செயலாளர் ரகுமான், தந்தை பெரியார் திராவிட கழக கரூர் மாவட்ட தலைவர் தனபால் உள்ளிட்ட பெரியார் உணவாளர்கள் மே 17 இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்