

கரூர்: டூவீலர் மீது கார் மோதி விபத்து
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, கீழமுனையனூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் வயது 45. இவரது உறவினர் அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மனைவி திவ்யா வயது 35. இவர்கள் இருவரும் ஏப்ரல் 4-ம் தேதி காலை 8:45 மணி அளவில், கரூர் - திருச்சி சாலையில் அவர்களது டூவீலரில் சென்றனர். திவ்யா பின்னால் அமர்ந்து சென்றார். இவர்களது வாகனம் கரூர்- திருச்சி சாலையில் உள்ள தனியார் மரசெக்கு எண்ணெய் கடை அருகே வந்தபோது, எதிர்திசையில் கோவை மாவட்டம், ஒண்டிப்புதூர், நாகையன் தோட்டத் தெருவைச் சேர்ந்த முகமது ஷரீப் என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், சந்திரசேகரன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கீழே விழுந்த திவ்யாவுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக சந்திரசேகரன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தொடர்பாக காரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய முகமது ஷரீப் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.