அம்மையப்ப கவுண்டன் புதூரில் பணியின் போது மயங்கி விழுந்த வட மாநில தொழிலாளி உயிரிழப்பு. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹாஜிகுமார் வயது 28. இவரது இளைய சகோதரர் ராஜ்குமார் வயது 29. இவர்கள் இருவரும் கரூர் மாவட்டம், வெள்ளியணை, கந்தசாரபட்டி அருகே உள்ள அம்மையப்ப கவுண்டன் புதூரில் செயல்படும் படுக்கை மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தனர். இந்நிலையில் ஏப்ரல் 1-ம் தேதி இரவு 9:30 மணி அளவில், பணியில் இருந்த ராஜ்குமாருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு தடுமாறினார்.
உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹாஜிகுமார், இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு, உயிரிழந்த ராஜ்குமாரின் உடலை அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.