ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, உணவு சாப்பிட்டுள்ளார். அப்போது, அது அவரது தொண்டையில் சிக்கியுள்ளது. இதனால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அந்த சிறுமி உயிரிழந்துள்ளார். முன்னதாக, சிறுமியை மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால், சிறுமியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.