விளவங்கோடு - Vilavengodu

வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம்- மொபைல் போன் பறிப்பு

வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம்- மொபைல் போன் பறிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஆர். சி தெருவை சேர்ந்தவர் ஆகாஷ்( 20 ) , இவர் நேற்று மார்த்தாண்டம் புதிய பேருந்து நிலையம் அருகாமையில் நின்ற போது பாறசாலை கருமனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜினேஷ்(30), என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ஆகாஷ் -இடமிருந்த மொபைல் போன் மற்றும் ரூ. 300 ஆகியவற்றை பறித்து சென்றுள்ளார். இது குறித்து ஆகாஷ் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஜினேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా