மரியகிரி:   மலங்கரை கல்லூரியில் போதை ஒழிப்பு பேரணி

83பார்த்தது
மரியகிரி:   மலங்கரை கல்லூரியில் போதை ஒழிப்பு பேரணி
களியக்காவிளை அருகே மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் என்சிசி மாணவர்கள் சார்பில் போதை ஒழிப்பு பேரணி நேற்று நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் துவங்கிய பேரணியை பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய் குமார் மீனா கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி துவக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் அருள்தாஸ் தலைமை வகித்தார்.

 முதல்வர் முனைவர் பீட்டர் அமரதாஸ் முன்னிலை வகித்தார். பேரணி தொடங்கும் முன் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனாவுக்கு என்சிசி மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். என்சிசி மாணவர்கள் போதை பயன்பாட்டிற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து மாணவர்களின் பேரணி நடைபெற்றது. பேரணியின் போது கிராம மக்களுக்கு போதை விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி