சங்கராபுரம் - Sankarapuram

கார் விபத்து தொடர்பாக போலீசில் நடிகர் ஜீவா புகார்

கார் விபத்து தொடர்பாக போலீசில் நடிகர் ஜீவா புகார்

சின்னசேலம் அருகே நடந்த கார் விபத்து தொடர்பாக, நடிகர் ஜீவா கொடுத்த புகாரின்பேரில், பைக்கில் வந்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். சென்னை ஈச்சம்பாக்கத்தை சேர்ந்தவர் சவுத்ரி மகன் அமர்சவுத்ரி (எ) ஜீவா, 40; திரைப்பட நடிகர். இவர், நேற்று முன்தினம் தனது மேலாளர் வினிதாகுமாரி, 36; என்பவருடன், டொயோட்டா அர்பன் ஹைட்ரைடர் காரில் சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்றார். சின்னசேலம் அடுத்த அம்மையகரம் பிரிவு ரோடு பகுதியில், அம்மையகரத்தை சேர்ந்த கருப்பன் மகன் மணிகண்டன் என்பவர் பஜாஜ் டிஸ்கவர் பைக்கில் திடீரென சாலையின் குறுக்கே கடந்துள்ளார். உடன், நடிகர் ஜீவா காரினை வலதுபுறமாக திருப்பிய போது, சென்டர் மீடியன் கட்டை மீது மோதி கார் விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்த நடிகர் ஜீவா, அவரது மேலாளர் வினிதாகுமாரி காயமடைந்தனர். இது குறித்து நடிகர் ஜீவா அளித்த புகாரின் பேரில், அஜாக்கிரதையாக பைக்கினை ஓட்டிய மணிகண்டன் மீது சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

வீடியோஸ்


கள்ளக்குறிச்சி