எலி பேஸ்ட் சாப்பிட்ட பெண் பலி

52பார்த்தது
மாத்துார் கிராமத்தில் எலி பேஸ்ட் சாப்பிட்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். கச்சிராயபாளையம் அடுத்த மாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி செல்வாம்பாள், 54; இவர், கடந்த மாதம் வீட்டை சுத்தம் செய்யும் போது தவறி கீழே விழுந்ததில், எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

வலியால் அவதியடைந்து வந்த அவர், கடந்த 15ம் தேதி காலை எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடன், சென்னையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி