மகளைக் கொன்ற தாய் அதிர்ச்சி வாக்குமூலம்

59பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சத்யா, 30. இவர்களின் மகன் ஆதவன், 13. மகள்கள் அக் ஷயா, 10, அதிசயா, 7.

இதில், அதிசயா இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த அதிசயா மாயமானார்; பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

பிரகாஷ் சங்கராபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, பூட்டை பஸ் நிலையம் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், அதிசயாவை அவரது தாய் சத்யா அழைத்துச் சென்ற காட்சி இருந்தது.

அவரிடம் விசாரணை நடத்த முடிவான நிலையில், தலைமறைவானார். நேற்று முன்தினம் மாலை அதே ஊரில், விவசாய கிணற்றில் அதிசயா உடல் மீட்கப்பட்டது. சத்யா நேற்று பூட்டை வி. ஏ. ஓ. , பிரபாகரனிடம் சரணடைந்தார். மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார்.

சத்யா பலரிடமும் கடன் வாங்கியதாகவும், சீட்டு எடுத்த பணத்தின் தவணையை கட்ட, உறுப்பினர்கள் வீட்டிற்கே வந்து பணம் கேட்டு அவமானப்படுத்தியதாலும், இறப்பு வீட்டில் பணம் கேட்க யாரும் வர மாட்டார்கள் என எண்ணி, தன் மகள் அதிசயாவை கொலை செய்ததாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி