கச்சிராயபாளையம் அருகே பைக் விபத்தில் ஒருவர் பலி

84பார்த்தது
கச்சிராயபாளையம் அடுத்த அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் உதயகுமார், 38.


இவர், நேற்று முன்தினம் இரவு 7: 00 மணியளவில் தனது நண்பரான எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த சீனுவாசன், 36; என்பவருடன் பைக்கில் சென்றார். அக்கராயபாளையம் அருகே சென்றபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியன் மீது மோதியது.


இதில் படுகாயமடைந்த உதயகுமார் கோயம்புத்துார் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.


புகாரின்பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி