பெருந்துறை - Perundurai

சென்னிமலையில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

சென்னிமலையில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

பெருந்துறையை அடுத்துள்ள அருகே மேலப்பாளையம் சரவணா நகரை சேர்ந்தவர் துரைசாமி - செல்வி தம்பதியினரின் இளைய மகள் ஷாலினி (24). ஷாலினிக்கும், சென்னிமலை ஈங்கூர் ரோடு, சிந்து நகரை சேர்ந்த கவின் குமார் (27) என்பவருக்கும் கடந்த 4-12-2022 அன்று திருமணம் நடைபெற்றது. கவின் குமார் கோவையில் உள்ள ஒரு தனியார் மில்லில் மெர்ச்சண்டைசராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு மகிழ் வெண்பா என்ற 6 மாத பெண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களாக ஷாலினி சரவணா நகரில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது கவின் குமார் தனது குழந்தையை அங்கு சென்று பார்த்து வந்தார். நேற்று கவின் குமார் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் தனது குழந்தையுடன் தாய் வீட்டில் தங்கியிருந்த ஷாலினி நேற்று அதிகாலையில் பாத்ரூம் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் ஷாலினி திரும்ப வராததால் அவரது தாய் செல்வி படுக்கை அறையை திறந்த போது வெளி பக்கமாக தாழிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் செல்வி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டின் மேற்கூறையை பிரித்து உள்ளே இறங்கி கதவை திறந்து விட்டனர். அப்போது வெளியே வந்து செல்வி பார்த்தபோது அங்கு சமையலறையில் ஷாலினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా