பெருந்துறை - Perundurai

ஈரோடு: 10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு: 10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள திருவாச்சி, மந்தம்பாளையம், ஏ. டி. காலனியை சேர்ந்த சேகர், தங்கமணி தம்பதியின் இளைய மகன் பரத்குமார் (15). இவர், பெருந்துறையில் உள்ள டுட்டோரியலில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர் திருவாச்சியில் அரசு பள்ளியில் படித்தபோது தன்னுடன் படித்த மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.  இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர், பரத்குமாரும், அந்த மாணவியும் சோளிபாளையம், பெருமாள் கோயில் முன்பு பேசிக் கொண்டிருந்ததை பார்த்த பரத்குமாரின் தாய் தங்கமணி, பரத்குமாரை கண்டித்துள்ளார். அப்போதிருந்தே பரத்குமார் சரியாக படிக்காமல் மன விரக்தியுடன் இருந்து வந்துள்ளார்.  இந்த நிலையில், நேற்று (ஜனவரி 27) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பரத்குமார் சேலையால் தூக்கிட்டுக் கொண்டுள்ளார். வெளியில் சென்றிருந்த தங்கமணி மதியம் 2 மணியளவில் வீட்டுக்கு வந்தபோது தனது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  உடனடியாக அவரை மீட்டு, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே பரத்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా