
சிதம்பரம்: தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கொத்தங்குடி தோப்பு பெரிய தெரு பகுதியை சேர்ந்த கண்ணன் தொழிலாளி இவரது மனைவி இறந்து விட்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கண்ணனின் மாமியார் வீட்டில் வளர்ந்து வருகின்றனர். கண்ணன் தனியாக தனது தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனிடையே மனமுடைந்து காணப்பட்ட கண்ணன் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி கண்ணன் நேற்று முன்தினம் (ஏப்ரல் 12) இரவு இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.