புவனகிரியில் விட்டு விட்டு பெய்து வந்த நிலையில் மேல் புவனகிரி பகுதியில் தற்பொழுது புதியதாக 62 லட்சத்தி ஐம்பதாயிரம் மதிப்பீட்டில் அரசால் கட்டப்பட்ட
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தண்ணீர் தேங்கி நெல் மூட்டைகள் பாதிப்படைந்து உள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையம் ஆற்று ஓரத்தில் கட்டப்பட்டதால் சரியான போக்குவரத்து வசதியின்றி மழை நீர் தேங்கி சேரும் சகதியுமாக இருக்கும் இடமாகும் இது குறித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் அளித்தும் இதற்காக பல்வேறு போராட்டங்கள் செய்தனர். விவசாயிகள் தெரிவித்தபடியே மழை நீர் முழுவதும் அங்கு தேங்கி இருப்பதால் அந்த இடமே தண்ணீர் காடாக காட்சி அளிக்கிறது. மேலும் மழைநீரை பணியில் உள்ள ஊழியர்கள் வெளியேற்றினாலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது அங்கு தற்போது சுமார் 4800 நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் விவசாயிகளின் நெற்கள் ஈரத்தரையில் கொட்டி கிடக்கிறது அரசு போதிய திட்டமிடல் இல்லாமல் நெல் கொள்முதல் நிலையம் அமைத்ததால் விவசாயிகள் முற்றிலும் பாதிப்படுகின்றனர் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர் மேலும் உரிய பாதுகாப்பான இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் பலரும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.