
புவனகிரி: இருசக்கர வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள வண்டுராயன்பட்டு மெயின் ரோட்டில் 65 வயதுடைய முதியவர் ஒருவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியதில் இதில் படுகாயமடைந்த அந்த முதியவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இது குறித்து புவனகிரி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.