பரங்கிப்பேட்டை: வெளி மாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் காவல் துறையினர் நேற்று காலை பெரியகுமட்டி பைபாஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அங்கு வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டிருந்த பூவாலை குளத்துமேட்டு தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை காவல் துறையினர் கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்து விசாரணை பரங்கிப்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.