
கடலூர்: தீயில் எரிந்த வீடு..குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ
கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்மாபுரம் ஒன்றியம் கோ. ஆதனூரில் தீ விபத்தில் வீடு எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார். உடன் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.