வால்பாறை - Valparai

கடன் வாங்கியதில் தகராறு; பெண்ணை மிரட்டிய வியாபாரி கைது

கடன் வாங்கியதில் தகராறு; பெண்ணை மிரட்டிய வியாபாரி கைது

கோவை ஆத்துப்பாலம் பகுதியை சேர்ந்தவர் பக்ருதீன்(48). இவர் அதே பகுதியை சேர்ந்த கபீர்(46) என்ற ஜெர்க்கின் வியாபாரியிடம் ரூ. 2, 500 கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்த பணத்தை திருப்பி கொடுப்பதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதே போல் நேற்று முன்தினம் ( செப்டம்பர் 14) ற்பட்ட பிரச்னையில், கபீரின் நண்பர் சமீரை பக்ருதீன் தாக்கினார். போலீசில் அளித்த புகாரில், குனியமுத்தூர் போலீசார் பக்ருதீனை கைது செய்தனர். முன்னதாக கபீர், பக்ருதீன் வீட்டுக்கு சென்று அவரது மனைவி பாத்திமா(46) விடம் பணம் கேட்டு தகராறு செய்தார். அப்போது அவர் பாத்திமாவை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தார். இது குறித்து பாத்திமா குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கபீரை பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

வீடியோஸ்


கோயம்புத்தூர்