அண்ணா நகர் - Anna nagar

செப். 14ம் தேதி தேமுதிகவின் முப்பெரும் விழா: பிரேமலதா

செப். 14ம் தேதி தேமுதிகவின் முப்பெரும் விழா: பிரேமலதா

தேமுதிகவின் முப்பெரும் விழா செப்டம்பர் 14-ல் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட உள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிகவின் 20-ம் ஆண்டு தொடக்க தினம் செப்டம்பர் 14-ம் தேதிவருகிறது. அந்த நாளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முப்பெரும் விழாவாக கொண்டாட வேண்டும். அதன்படி, பத்மபூஷண் விருதுக்காக தேமுதிக நிறுவனர் விஜயகாந்தை கவுரவிக்கும் விழா, கட்சியின் 20-ம் ஆண்டுதுவக்க விழா, விஜயகாந்தின் 72-வது பிறந்த நாள் விழா ஆகியவற்றை ஒருங்கிணைத்து முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த விழாவின்போது கட்சியின் கொடியை ஏற்றி, பொது மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும். இதற்கு காவல் துறையின் அனுமதியை முறையாக பெற்று மாலை வேளையில் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

வீடியோஸ்


சென்னை
மாநில பாடத்திட்டத்தின் தரம் குறைவு: ஆளுநர்
Sep 02, 2024, 12:09 IST/ராதாகிருஷ்ணன் நகர்
ராதாகிருஷ்ணன் நகர்

மாநில பாடத்திட்டத்தின் தரம் குறைவு: ஆளுநர்

Sep 02, 2024, 12:09 IST
சென்னை சேத்துப்பட்டில் உள்ள கே. டி. சி. டி. பெண்கள் மேல்நிலை பள்ளியின் நுாற்றாண்டு விழா நேற்று நடந்தது. நுாற்றாண்டு விழா மலரை வெளியிட்டு, கவர்னர் ரவி பேசியதாவது, நாட்டின் பொருளாதாரம், கடந்த 10 ஆண்டுகளில் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நுாறாவது ஆண்டு சுந்திர தினம் கொண்டாடும் போது, இந்தியா முழுமையான வல்லரசாகும். அதற்கு பெண் சக்தியின் பங்களிப்பு மிக அவசியம். ஒவ்வொரு வீட்டிற்கும் பெண்களே முதுகெலும்பாக உள்ளனர். எதிர்க்கட்சியினர் மீது லோக் ஆயுக்தா விசாரணை கவர்னர் விளக்கம் கேட்டதாக பரமேஸ்வர் தகவல் அதேபோல, நாட்டின் வளர்ச்சிக்கும் பெண்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு, அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியம். பெண் சக்தி தான், இந்த நாட்டை முன்னேற்றுகிறது. இந்த நாடு பெண்களால் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு, நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும். தேசிய பாடத்திட்டத்துடன் ஒப்பிடும் போது, மாநில பாடத்திட்டம் தரம் குறைவாக உள்ளது. பல்வேறு கல்லுாரிகளுக்கு சென்ற நான், அங்குள்ள மாணவர்களிடம் உரையாடினேன். அவர்களுக்கு, செயற்கை நுண்ணறிவு, 'ரோபோட்டிக்ஸ்' போன்றவை பற்றிய பார்வை, அறிவுத் திறன் குறைவாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.