-Election

13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்

13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்

8ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி இருவரால் கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இச்சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் நடந்துள்ளது. லால்சோட் நகரின் மந்த்வாரி காவல் நிலையப் பகுதியில் தேர்வெழுதச் சென்ற சிறுமியை இரண்டு பேர் கடத்திச் சென்றனர். பின்னர் சிறுமியை பலாத்காரம் செய்து மலர்னா துங்கரில் உள்ள பெட்ரோல் பங்கில் விட்டுச் சென்றுள்ளனர். சிறுமியை அடையாளம் கண்டு கொண்ட அப்பகுதியினர் போலீஸ்க்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். போலீசார் இந்த கொடூர சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.