மகளிர் உரிமைத்தொகை திட்டம்: 7 லட்சம் பேர் மேல்முறையீடு

93505பார்த்தது
மகளிர் உரிமைத்தொகை திட்டம்:  7 லட்சம் பேர் மேல்முறையீடு
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். தமிழகத்தில் 1 கோடியே 6 லட்சம் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 15ஆம் தேதி இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட பெண்கள் மீண்டும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி இ-சேவை மையங்களில் பெண்கள் மீண்டும் விண்ணப்பித்து வந்தனர். இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி