குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரண நிதி...!

941பார்த்தது
குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரண நிதி...!
சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயல் எதிரொலியால் கனமழை பெய்தது. இதனால் சென்னை வெள்ளத்தில் தத்தளித்தது. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதற்கான டோக்கன் 5 நாட்களில் வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்றும் விண்ணப்பங்களை பதிவு செய்தால் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிதி வழங்கப்படும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி