இளம்பெண் வெட்டிக் கொலை

73334பார்த்தது
இளம்பெண் வெட்டிக் கொலை
சென்னை: வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ் மனைவி நந்தினி (27). இவர், அம்பத்துார் ஐ.சி.எப்., காலனி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் இருந்தார். அங்கு, முகமூடி அணிந்துவந்த நால்வர், நந்தினியை சரமாரியாக வெட்டிக்கொன்றனர். தகவலறிந்த போலீசார், நந்தினி உடலை கைப்பற்றி, கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், இரு ஆண்டுகளுக்கு முன், பாலாஜி என்பவர் கொலை வழக்கில் நந்தினி கணவர் சதீஷுக்கு தொடர்பு இருப்பதும், அதனால், அவருக்கும், நந்தினிக்கும், அச்சுறுத்தல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட தன் தம்பியின் இறுதி சடங்கில் பங்கேற்ற நந்தினியை மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர். இது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி