தமிழக மீனவர்கள் 14 பேரை சிறையில் அடைத்த இலங்கை கடற்படை

82பார்த்தது
தமிழக மீனவர்கள் 14 பேரை சிறையில் அடைத்த இலங்கை கடற்படை
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தில் இருந்து மீனவர்கள் சிலர் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் இன்று காலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை சிறைபிடித்தனர். அதனுடன், அவர்களின் 3 விசைபடகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி