விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஐந்து மாநிலங்களின்
தேர்தல்கள் குறித்து கூறுகையில், பாஜகவுடன் நேரடியாக மோதும் இடங்களில்
காங்கிரஸ், வெற்றிபெற்றே ஆக வேண்டும். இந்தி பேசும் மாநிலங்களில் வலுவான கட்சியாக அது உருவெடுக்க வேண்டும்.காங்கிரஸ் எந்தளவு வலுப்பெறுகிறதோ அந்த அளவுக்கு 2024இல் ஆட்சி அமைப்பதும் எளிதாக இருக்கும். ஐந்து மாநிலத் தேர்தலில்
காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றிபெறும்போது, முரண்கள் எல்லாம் காணாமல் போகும் என்றார்.