மனைவியை பலாத்காரம் செய்வதும் குற்றமே: உயர் நீதிமன்றம் அதிரடி!

66125பார்த்தது
மனைவியை பலாத்காரம் செய்வதும் குற்றமே: உயர் நீதிமன்றம் அதிரடி!
மனைவியை அவரது விருப்பத்துக்கு மாறாக வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்த வழக்கு தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றம் முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளது. பலாத்காரம் என்பது குற்றச்செயல் என்றும், கணவன் தன் மனைவியிடம் அவர் விருப்பமின்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாலும் அதைக் குற்றமாகக் கருத வேண்டும் என நீதிபதி திவ்யேஷ் ஏ ஜோஷி தெரிவித்துள்ளார். தனது மனைவியுடனான உடலுறவை வீடியோ எடுத்து ஆபாச இணையதளங்களில் வெளியிட்ட கணவருக்கும், இதற்கு ஊக்கம் அளித்து உதவிய அவரது பெற்றோருக்கும் ஜாமீன் மறுப்பு தெரிவித்து இந்தக் கருத்துக்களை நீதிபதி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி